May 31, 2025 7:27:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

ஆசிரியர் சேவையில் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், சேவை அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

ஆகையினால் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக அவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆயினும் தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்கவில்லையென தெரிவித்து அவர்கள் இன்றைய தினம் மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் ஆளுநரின் செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும், இல்லையெல் தொடர்ச்சியாக பேராட்டங்களை நடத்துவோம் எனவும் தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.