![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/S6650024.jpg?fit=1024%2C576&ssl=1)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையில் தவிசாளராக மீண்டும் சோபா ஜெயரஞ்சித் பதவியேற்றுள்ளமையைக் கண்டித்து கருப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு எதிர்த்தரப்பினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘நீதி விசாரணை என்ன இழுத்தடிப்பா?, அதிகாரிகளும் ஊழல் வாதிகளா, கிழக்கின் நிர்வாகம் யார் கையில், போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி புதிதாக கொண்டுவரப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 9 சபைகளுக்கே தவிசாளர் தெரிவிற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கோறளைப்பற்று பிரதேசசபைக்கு அது செல்லுபடியாகாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/10.jpeg?resize=589%2C329&ssl=1)
இதனால் புதிய தவிசாளரின் பதவியேற்பைக் கண்டித்து தாம் நீதிமன்றம் செல்வதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்த்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.