July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி சர்ச்சை ; மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒத்திவைப்பு!

2020 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.