October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாகர்கோயில் படுகொலை: 25ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் மகா வித்தியாலயத்தின் மீது 1995-ஆம் ஆண்டு இலங்கை விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 21 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாடசாலையிலுள்ள நினைவாலயத்தில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு அவர்களது பெற்றோர், உறவினர்கள், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர் ஆகியோர் சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்து கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்தினர்.