May 30, 2025 14:32:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்றைய தினத்தில் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
62,445 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 963 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 55,391 பேர் குணமடைந்துள்ளதுடன், 6,750 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்வடைந்துள்ளது.

வடக்கில் 7 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் 3 பேர் மன்னார் நானாட்டானைச் சேர்ந்த சுயதனிமைப்படுத்தபட்டவர்கள் என்று    வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் மன்னார் வைத்தியசாலையில் ஊழியர் ஒருவருக்கும் அங்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கும் தொற்று இருப்பதாக பிசிஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.