![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/amparai.jpg?fit=800%2C450&ssl=1)
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தயாரிப்பான சொட்கண் ரக துப்பாக்கியொன்றே மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று (22) காலை குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது குறித்த துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/Ambarai.jpg?resize=640%2C360&ssl=1)