July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விளக்கேற்றும் நிகழ்வு

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் விளக்கேற்றும் நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய மன்னார் தரவன் கோட்டை  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தோட்டவெளி, பறப்பான்கண்டல், இசங்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள ஆலயங்களில் இந்த விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அரசியல் கைதிகளின் உறவுகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்கு- கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.