July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும்’

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக அப்பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் அப்பிரதேசத்தின் நலன்கருதியும் இவ் உறுதிமொழியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் செயலராக பதவிவகித்த சோதிநாதனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலராக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ச்சியாக வேலணை பிரதேசத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.