![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/09/President.jpg?fit=800%2C450&ssl=1)
நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடாமல் இருப்பதையே ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற உயர் மட்டக் குழு கூட்டத்தில் காணொளி ஊடாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகம் பொதுவான ஒரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் எங்களுக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபையானது இறையாண்மை, சமத்துவம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அத்துடன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.