
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப்போராட்டம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை வந்தடைந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமது கோரிக்கை மனுவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.