July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது: இலங்கையின் இன்றைய நிலவரம்!

இலங்கையில் இன்றைய தினத்தில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 59,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 709 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 51,046 பேர் குணமடைந்துள்ளதுடன், 8,588 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளது.

வடக்கில் 18 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 3 பேர் பொலிஸார் என்பதுடன், 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.