July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உடபுஸ்ஸலாவையில் திடீர் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்க வைப்பு

நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டெல்மார் கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த வீட்டில் தங்கியிருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்படும் போது அயலவர்கள்  ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீக்கிரையான வீட்டில்  பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், புத்தகங்கள், வீட்டு உபகரணங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை தீ விபத்து இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

This slideshow requires JavaScript.