
இலங்கையின் மேல் மாகாணத்திலிருந்து வெளியேரும் அனைவருக்கும் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் 01 ஆம் திகதி வரை என்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் வியாழக்கிழமை போயா தினத்துடன் வரும் நீண்ட விடுமுறை காரணமாக அதிகமானோர் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறவுள்ள நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் சுமார் 1,000 சாரதிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளின் உதவியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளின் போது, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.