July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்

இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியான நீதி இல்லத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அடிக்கல் நாட்டிவைத்துள்ளார்.

இலங்கையின் நீதி அமைச்சு உட்பட நீதித்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இப்புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படுகின்றது.

கொழும்பில் 6 ஏக்கர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத் தொகுதிக்கு நிதி அமைச்சு 16,500 ரூபா மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நீதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தை மூன்று வருடங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.