July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு: தவிசாளராக சரத் பொன்சேகா

File photo: Facebook/ Sajith Premadasa

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவராக தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்படவுள்ளதோடு, பொதுச் செயலாளராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியின் புதிய பேச்சாளர்களாகத்  தெரிவுசெய்யப்பட்டுள்னர்.

சிரேஷ்ட பிரதித் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளுக்கும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.