June 15, 2025 21:00:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

‘யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராக யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை ஜெனிவாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல், கொலைக்குற்றங்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை  அங்கு சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் தமிழ் கட்சிகள் எந்தவித கரிசனையும் செலுத்துவது இல்லை எனவும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.