June 16, 2025 23:43:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாணந்துறையில் இனந்தெரியாத குழுவின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று முற்பகல் இனந்தெரியாத குழுவொன்றின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர், முச்சக்கர வண்டியொன்றை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.