July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹா மாவட்டத்தில் சில பிரதேசங்கள் முடக்கம்

கம்பஹா மாவட்டத்தில் சில பிரதேசங்கள் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி அறிவித்துள்ளது.

இதன்படி மினுவாங்கொட பொலிஸ் பிரிவில் கல்லொளுவ ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, நித்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகரகொட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் நசீர் வத்த, கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் திகாரிய வடக்கு, கிழக்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.