July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழரின் வாழ்வுரிமை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல்

தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் அபகரித்தல் மற்றும் காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.