July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவிலிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையும்’

இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு இலங்கை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முதற்தொகுதியாக 6 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதற்தொகுதியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசிளை விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் பணியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்திருந்தது.