June 14, 2025 16:15:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுளை, வலப்பனையில் சிறியளவிலான நில அதிர்வு

File Photo

இலங்கையின் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் சிறியளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு 1.8 ரிச்சர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.29 மணியளவில் பதுளை மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களில் 6 செக்கன்களுக்கு இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்திலும் இதேபோன்ற நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.