October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் சபையின் உடைமையாக்கப்படும்”

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணிகள் சபை உடைமையாக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் காணிகள் அதன் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது காடுகளாக காட்சியளிக்கின்றன.

இவற்றை பிரதேச சபை உறுப்பினர்களுடன் சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது. அதனை தடுக்கவும் மற்றும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியினை தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கும் காணி உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை துப்பரவு செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு சுத்தம் செய்து பராமரிக்கத் தவறும் பட்சத்தில் அந்த காணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் உடைமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.