
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய காணி தொடர்பான முறைகேடுகள் குறித்து ஆராய காணி அமைச்சின் கீழ் சிறப்பு பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தனிநபர்களினாலும் தோட்ட நிறுவனங்களினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இவ் புதிய பிரிவின் ஊடாக எந்தவொரு அரசியல் மற்றும் தனியாரின் தலையீடும் இன்றி காணிகளை மீட்டு நிலமற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, காணி தொடர்பான முறைகேடுகள் குறித்து திணைக்களத்திற்கு தெரிவிக்க 1931 என்ற சிறப்பு தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கு பணிப்பாளராக ஓய்வுபெற்ற தேசிய உளவுத் துறையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புதிய பிரிவுக்கு தலைமை தாங்க இரண்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.