June 14, 2025 14:25:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள பினுர பெர்ணாண்டோ மற்றும் சாமிக கருணாரட்ன ஆகியோருக்கே தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணி வீரர்கள் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன்போதே இவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான இரண்டு வீரர்களும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நேரடி தொடர்புகளை பேணிய மற்றைய வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.