July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேங்காயை திருடியதாக கைதானவருக்கு ஒரு இலட்சம் ரூபா பிணை

தென்னந்தோட்டமொன்றில் 120 ரூபா பெறுமதியான தேங்காயொன்றை திருடிய குற்றத்தில் கைதாகிய ஒருவர் நீதிமன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது தென்னந்தோட்டத்தில் குறித்த நபர் தேங்காயை திருடியுள்ளதாக தெரிவித்து தோட்ட உரிமையாளர் பொலிஸாரிடம் முறையிட்ட நிலையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபர் மீண்டும் மார்ச் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.