July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடமாகாண சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்துகள் அடங்கிய மகஜரொன்று இன்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ். மாவட்டத்தில் உள்ள சர்வமதத் தலைவர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதோடு, வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்றைய தினம் மதத் தலைவர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு, இன்று யாழ். ஸ்ரீநாக விகாரையின் விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமல தேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மதத் தலைவர்களின் கையெழுத்துகள் அடங்கிய மகஜரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் தேரரிடம் வழங்கி வைத்துள்ளார்.

This slideshow requires JavaScript.