February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சீரற்ற காலநிலை தொடரும்!

இலங்கையில் மாவட்டங்கள் பலவற்றில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா , கண்டி , மாத்தளை, கேகாலை , இரத்தினபுரி , கொழும்பு , கம்பஹா , களுத்துறை , குருநாகல் , புத்தளம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த மாவட்டங்களில் இன்றைய தினத்தில் 100 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும், அதேபோன்று தற்போதைய சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.