July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையைத் தொடர்ந்தே, அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது ஊழியர்கள் 10 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கல்வி இராஜாங்க அமைச்சரான பியல் நிஷாந்தவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காவது உறுப்பினராக பியல் நிஷாந்த கருதப்படுகின்றார்.

இதற்கு முன்னர் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த பாராளுமன்றத்தில் கொரோனா தடுப்புப் பாணி எனக் கூறப்பட்ட மூலிகைப் பாணியை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.