July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் பொதுச் சந்தைகள் மீளத் திறக்கப்பட்டது

கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுச் சந்தைகள் இன்று காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன.

மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் சுகாதார பிரிவினரால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன.

தற்போது அங்கு தொற்று நிலைமைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ள நிலையில் அந்த சந்தைகளை சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இன்று முதல் மீளத் திறப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதன்படி வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச் சந்தை மருதனாரமடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் பொலிஸார் சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.