June 16, 2025 2:21:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அளவீட்டுப்பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடு மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி இன்று ஆரம்பமாகியது.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டுள்ளன.