![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/Mannar-Prayers-3.jpg?fit=1024%2C682&ssl=1)
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி இன்றைய தினம் மன்னார், தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் ளு.திலீபன் தலைமையில் இந்த விசேட வழிபாடு நடத்தப்பட்டது.
சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அரசியல் கைதிகள் மீது கரிசணை கொண்டு அவர்களை விடுவிப்பதன் மூலம் சிறைகளில் பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் படி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகளினால் கூட்டுப்பிரார்த்தனை இடம்பெற்றதுடன் சிறப்பு திருப்பலி கொடுக்கப்பட்டது.