February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார விதிமுறைகளை மீறியதால் யாழ். திரையரங்குக்கு பூட்டு

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணத்தில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் இருக்கைகளின் எண்ணிக்கையை 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து டிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தது.

அத்தோடு டிக்கெட்டுகளை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியுள்ளதாக சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.

இதனையடுத்து அந்த திரையரங்கு சுகாதார விதிமுறைகளின் படி மூடப்பட்டது.

இதேவேளை நாடு முழுவதும் திரையரங்குகளில் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதிகளவான ரசிகர்கள் டிக்கெட்டுக்களுக்காக பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.