October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா கோட்டத்தில் உள்ள 42 பாடசாலைகளையும் நாளை மூடத் தீர்மானம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 42 கோட்ட பாடசாலைகளையும் நாளை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரைச் சேர்ந்த 2000 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பிசிஆர் முடிவுகள் வரும்வரையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும், அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளைய தினம் மூடவும் செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியரியர்கள் கடமைக்கு செல்ல தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.