July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டிருந்தாலும், அது ஒரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பல்ல என்றும் தெரியவருகின்றது.

அத்தோடு, கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பாக அவதானமாக இருக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேநேரம், இதுவரையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 32 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாராளுமன்ற கொரோனா கொத்தணியொன்று உருவாகும் அவதானம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.