July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனவரி இறுதிக்குள் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்பு’

ஜனவரி மாதத்திற்குள் இலங்கைக்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டு மக்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்து தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமாக இருக்குமென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்காக பயன்படுத்துவதற்காக உலக சுகாதார தாபனத்தினால் இதுவரையில் ஒரேயொரு தடுப்பூசி மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி கொவெக்ஸ் முறைமையின் கீழ் அவற்றை இலங்கைக்கு கொண்டு வரத் தேவையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசியை கொண்டு வந்தவுடன் முதல் மூன்று மாதங்களுக்குள் இலங்கை மக்களுக்கு அதனை வழங்க முடியுமாக இருக்குமென தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.