July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீள நிர்மானிக்கும் வகையில் இன்று காலை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, இடித்தழிக்கப்பட்ட நினைவிடத்தை மீள அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து துணைவேந்தர் தலைமையில்  நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல்  மாணவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.