July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு கொவிட் தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொரளை பிரதேசத்தில் கௌதமிபுர 24 ஆம் இலக்க தோட்டம் மற்றும் கௌதமிபுர வீட்டுத் தொகுதி ஆகிய இடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.