May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 47 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 47 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இன்று காலை நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10  ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.