July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்து மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இராமநாதன் வீதியில் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்போதய கொரோனா அச்ச நிலை காரணமாக கைவிடப்படுவதாகவும், சில மாணவர்கள் மாத்திரம் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மாணவர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட ‘தீர்வு கிடைக்கும் வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்’ இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.