
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினராக ஹக்கீம் கருதப்படுகின்றார்.
I have tested positive for COVID-19 today and will be entered into a quarantine facility. I request those who came into contact with me in the last 10 days to take necessary health and safety precautions.
— Rauff Hakeem (@Rauff_Hakeem) January 10, 2021
‘எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொள்கின்றேன். கடந்த 10 நாட்களில் என்னைச் சந்தித்த அனைவரும் தேவையான சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளவும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் தொடர்புபட்ட 118 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.