![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/20210102_220916.jpg?fit=1024%2C682&ssl=1)
File Photo : Twitter /Srilanka Red Cross
இலங்கையில் இன்றைய தினத்தில் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,840 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 521 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,838 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று 4 உயிரிழப்புக்கள் பதிவு
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.