June 11, 2025 10:09:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை’

Shavendra-Silva-

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமைக்கும்  இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டு வகையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நினைவிடம் இடிக்கப்பட்டமையானது யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம். அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையிடப் போவதில்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் தமக்கு ஏற்கனவே அறிவிப்பு வரவில்லை எனவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டால் மாத்திரமே இராணும் தலையிடுவதற்கு உத்தரவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தவறான கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்த அவர் இரவு வேளைகளில் இவ்வாறான செயற்பாடுகளை இராணுவம் ஒருபோதும் செய்யாது எனவும் மேலும் குறிப்பிட்டார்.