June 16, 2025 10:23:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவல் காரணமாக இலங்கையின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர  சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய கிரியுள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மும்மன மற்றும் வெந்தேவ கிராம சேவகர் பிரிவுகளும் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கொட பிரதேசத்தின் சில பகுதிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் அவ்வாறே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.