May 30, 2025 12:26:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யாழ். பல்கலைக்கழக சம்பவம் உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது”: தமிழக முதல்வர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

”இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ”உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.