July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரை’

இலங்கையில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்று, வைரஸ் தொடர்பான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனால் யாருடைய மத, அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் இந்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சுகாதார அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை வைரஸ் தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரை அடங்கிய அறிக்கை, கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை எரிப்பதா? அடக்கம் செய்வதா? என்பது தொடர்பாக ஆராயும் பிரதான குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும், அந்தக் குழு அதனை ஆராய்ந்து தமது முடிவை அறிவிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.