June 12, 2025 14:11:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கல்லுண்டாயில் சுழல் காற்று- 9 வீடுகள் பகுதியளவில் சேதம்; 41 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே-136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இன்று மாலை வீசிய சுழல் காற்றால் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தங்க வைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தற்காலி கூடாரங்கள் வழங்கியுள்ளனர்.