![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/02-scaled.jpg?fit=1024%2C734&ssl=1)
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
2 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இலங்கையில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
மேலும் பல பிரமுகர்கள், வணிகத் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பதுடன் இந்த ஆண்டின் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.