July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது’

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமது தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தி வருவதையே எடுத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  குற்றம் சுமத்தினார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு மருந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முறையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் இதன் போது தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகள் தமது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் செயற்படுகின்ற போதும், இலங்கையில் இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என  பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.