July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கலைப்பீட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தங்கள் மீதான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து நேற்று காலை முதல் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்பாக மாணவர்கள் இவ் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில் விலக்கிக்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கமைய போராட்டத்தைக் கைவிடுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

எனினும், இந்த முடிவை ஏற்க மறுத்த மாணவர்கள் தமது போரட்டத்தை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளனர்.

This slideshow requires JavaScript.