October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் ஆட்டோ , மோட்டார் சைக்கிள்களுக்கு விசேட ‘வீதி ஒழுங்கை’ சட்டம் –

கொழும்பு நகரில் பிரதான வீதிகளில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்கள் நாளை (16) முதல் இடப் பக்க ஒழுங்கையிலேயே பயணிக்க வேண்டுமென பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் கொழும்பில் வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனுடன் இணைந்ததாகவே இந்த அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.வீதிகளில் இடப்பக்க ஒழுங்கை தற்போது பேருந்துகளுக்கு பயணிக்க என்றே ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை முதல் அந்த ஒழுங்கையில் பேருந்துகளுடன் ஆட்டோ , மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களும் பயணிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த அறிவித்தலை பின்பற்றாத வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.